search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர் கோவில் நிர்வாகி தாக்குதல்"

    கூடலூர் அருகே கோவில் நிர்வாகியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன்(வயது51). இவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே கே.ஜி.பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவில் நிர்வாகியாக உள்ளார். குடும்பத்துடன் அதேபகுதியில் தங்கியுள்ளார்.

    தற்போது முத்தாலம்மன் கோவிலில் திருவிழா முடிந்து மறுபூஜை நடைபெற்றது. அப்போது அதேபகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வெளியூர் ஆட்கள் இங்கு வந்து நிர்வாகியாக இருப்பதா எனகூறி அவரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கருப்புசாமி மனைவி செல்லத் தாய் (55). இவரது மகள் வனிதாவுக்கும், அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ஆசை மனைவி மணி, வனிதாவை நகை கொண்டுவரவில்லை எனக்கூறி திட்டியுள்ளார்.

    இதனை செல்லத்தாய் தட்டிகேட்டகவே ஆத்திரமடைந்த மணி, அருண் பாண்டியன், பாண்டீஸ்வரி, பாக்கியம் ஆகியோர் அவரை தாக்கி மிரட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×